சாலையோர டீ கடைக்குள் புகுந்த மினி ஆட்டோ… பெண் உள்பட 5 பேர் படுகாயம்…

 

சாலையோர டீ கடைக்குள் புகுந்த மினி ஆட்டோ… பெண் உள்பட 5 பேர் படுகாயம்…

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மினி ஆட்டோ ஒன்று, சாலையோர டீ கடைக்குள் புகுந்ததில் பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.த

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் பகுதியில் சுப்ரமணி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று மாலை சுமார் 6.30 மணி அளவில் கடையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் டீ அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது, சாலையில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மினி ஆட்டோ ஒன்று, திடீரென டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் கடையில் இருந்த பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாலையோர டீ கடைக்குள் புகுந்த மினி ஆட்டோ… பெண் உள்பட 5 பேர் படுகாயம்…

விபத்தில் சிக்கியவர்களை அந்த பகுதி மக்கள் உடனடியாக மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினி ஆட்டோ ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக சின்ன வரிகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.