மிக்-29கே போர் விமான விபத்து: பயிற்சி விமானியை தேடும் பணி தீவிரம்!

 

மிக்-29கே போர் விமான விபத்து: பயிற்சி விமானியை தேடும் பணி தீவிரம்!

கடந்த 26ம் தேதி மாலை இந்திய கப்பற்படைக்கு சொந்தமான மிக்-29கே போர் விமானம், 2 விமானிகளுடன் புறப்பட்டுள்ளது. அந்த விமானம் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியதாக வெளியான தகவல் அதிர்ச்சியளித்தது. இதனையடுத்து, விமானிகளை தேடும் பணியில் விமானப்படை வீரர்கள் களமிறங்கினர். இந்த நிலையில், விமான விபத்தில் சிக்கிய ஒரு விமானி உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.

மிக்-29கே போர் விமான விபத்து: பயிற்சி விமானியை தேடும் பணி தீவிரம்!

மற்றொரு பயிற்சி விமானியை தேடும் பணி தொடர்ந்து வருவதாக கப்பற்படை அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த விபத்து குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மிக்-29கே ரக போர் விமானங்கள் ஐஎன்எஸ், விக்கிரமாதித்யா உள்ளிட்ட போர் கப்பல்களில் பயன்படுத்தப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.