பாஜக ஆதரவாளர்களை சம்பவம் செய்த மியா கலிபா – விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ட்வீட்!

 

பாஜக ஆதரவாளர்களை சம்பவம் செய்த மியா கலிபா – விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ட்வீட்!

இந்திய இளைஞர்களுக்கு ஒரு கண் சன்னி லியோன் என்றால், மற்றொரு கண் நடிகை மியா கலிபா. விளையாட்டிற்காக இதைச் சொல்லவில்லை. அவர்கள் பாலியல் சார்ந்த படங்களுக்கு மட்டுமில்லாமல், அவர்கள் செய்யும் தொண்டுகளுக்காகத் தான் அவர்களுக்கான ரசிகர் பட்டாளம் பெருகியது. தற்போது மியா கலிபா இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

பாஜக ஆதரவாளர்களை சம்பவம் செய்த மியா கலிபா – விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ட்வீட்!

டெல்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க தடுப்புகள், முள் வேலிகள், முள் பலகைகள் என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி போலீஸ் ஏற்பாடு செய்துள்ளது. இணைய சேவையையும் துண்டித்துள்ளது. இத்தகைய அராஜக நடவடிக்கைகளை பாஜக ஆதரவாளர்களைத் தவிர்த்துவிட்டு ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்க்கிறது.

பாஜக ஆதரவாளர்களை சம்பவம் செய்த மியா கலிபா – விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ட்வீட்!

இச்சூழலில், ஹாலிவுட்டின் பிரபல பாப் பாடகி ரிஹானா, விவசாயிகளின் பிரச்சினையை உலகம் ஏன் பேச மறுக்கிறது என்று ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட்டுக்கு பின் விவசாயிகளின் போராட்டமும், டெல்லி போலீஸின் அடக்குமுறையும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ரிஹானைவை தொடர்ந்து சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் நடிகை மியா கலிபாவும் இணைந்திருக்கிறார். இந்தியாவில் மனித உரிமை மீறல் நடப்பதாகக் குற்றஞ்சாட்டும் அவர், விவசாயிகளுக்கு ஆதரவாக நான் நிற்பேன் என்று கூறியிருக்கிறார்.

தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சிலர் விவசாயிகள் காசுக்காக நடிப்பதாகக் குற்றஞ்சாட்டினர். அவர்களையும் மியா சர்காஸ்டிக்காக செய்துவிட்டார். இதுதொடர்பான மற்றொரு ட்வீட்டில், “விவசாயிகள் காசுக்காக நடிக்கிறார்களா? அவர்கள் சிறந்த இயக்குநர்கள் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, விருது வழங்கும் விழா கமிட்டியாளர்களின் கண்ணில் படாமல் இருப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்று கிண்டல் செய்திருக்கிறார்.