எம்ஜிஆர் நினைவு தினம்: ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை!

 

எம்ஜிஆர் நினைவு தினம்: ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை!

முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 33ஆவது நினைவு நாள் இன்று. இதனையொட்டி, தமிழகத்தின் பல இடங்களில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

எம்ஜிஆர் நினைவு தினம்: ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை!

அந்த வகையில், துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை க்ரீன்வெஸ் தனது வீட்டில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் பழனிசாமியும் தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

எம்ஜிஆர் நினைவு தினம்: ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை!

இதைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அமைச்சர் செல்லூர் ராஜு, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.