மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு!

 

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு!

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக உள்ளது என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதைத் தொடர்ந்து இரு அணைகளிலிருந்தும் உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது. 90 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு!

இதனிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியில் இருந்து 1.30 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 81 அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 43.06 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. காவிரியிலிருந்து டெல்டா பாசனத்துக்காக 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.