முன்னேற்பாடுகளுடன் சென்னையில் இன்று முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

 

முன்னேற்பாடுகளுடன் சென்னையில் இன்று முதல்  மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

சென்னையில் 5 மாதத்திற்கு பிறகு இன்று மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

சென்னையில் 5 மாதத்திற்கு பிறகு மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளன. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஸ்மார்ட் கார்டு மற்றும் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய காற்று செல்லும் பாதைகள் புற ஊதாக் கதிர்கள் மூலம் கிருமிகள் அழிக்கப்பட்டு வருகிறது.

முன்னேற்பாடுகளுடன் சென்னையில் இன்று முதல்  மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

காலை 8.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் 5 நிமிடத்திற்கு ரயில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னேற்பாடுகளுடன் சென்னையில் இன்று முதல்  மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

ஒரு ரயில் 20 நிமிடங்களுக்கு பதிலாக 50 நிமிடங்கள் தடத்தில் நின்று செல்லுமாறும், 30 டிகிரி வெப்பநிலையில் மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.