‘குளத்தில் மிதந்த சடலம்’ : மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எடுத்த விபரீத முடிவு!

 

‘குளத்தில் மிதந்த சடலம்’ : மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எடுத்த விபரீத முடிவு!

புதுக்கோட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை சின்னப்பா நகரில் வசித்து வந்த தம்பதி சண்முகம்- ரமா (40). சண்முகம் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில், ரமாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். நேற்று ரமா வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

‘குளத்தில் மிதந்த சடலம்’ : மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எடுத்த விபரீத முடிவு!

இந்த நிலையில், அப்பகுதியில் இருக்கும் பேராங்குளத்தில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், போலீசார் அந்த சடலத்தை மீட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அது ரமாவின் சடலம் என்று தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சண்முகம், ரமாவின் சடலத்தை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, ரமாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரமா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.