“மக்களை சந்தித்து, அரசின் திட்டங்களை எடுத்துக்கூறுங்கள்” – அமைச்சர் வேலுமணி

 

“மக்களை சந்தித்து, அரசின் திட்டங்களை எடுத்துக்கூறுங்கள்” – அமைச்சர் வேலுமணி

கோவை

சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 3 மாத காலமே உள்ளதால், பொதுமக்களை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம், அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டார். கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

“மக்களை சந்தித்து, அரசின் திட்டங்களை எடுத்துக்கூறுங்கள்” – அமைச்சர் வேலுமணி

இதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக எல்எல்ஏ-க்கள் கஸ்தூரி, அருண்குமார், ஆறுகுட்டி, அர்ஜுனன், சின்னராஜ், எட்டிமடை சண்முகம், கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலுமணி, தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றி வருபவர்கள் திமுகவினர் என்றும், தேர்தலுக்கு பிறகு அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றும் கூறினார்.
அதிமுகவுக்குள் பிரச்சினை வருமென்று எதிர்த்த பார்த்த திமுகவுக்கு, அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறிய வேலுமணி,

“மக்களை சந்தித்து, அரசின் திட்டங்களை எடுத்துக்கூறுங்கள்” – அமைச்சர் வேலுமணி

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவது உறுதி என்று தெரிவித்தார். இதற்காக, அதிமுக தலைமை கொடுக்கும் பணிகளை நாம் செய்ய வேண்டும் என கூறிய அவர், சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 3 மாதங்களே உள்ளதால், கட்சி தொண்டர்கள் பொதுமக்களை சந்தித்து அதிமுக அரசின் பல்வேறு நலத் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.