மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். நியமனம்!

 

மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். நியமனம்!

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாகை மாவட்டத்தின் முக்கிய சந்திப்பாகவும் திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களின் கூட்டு சந்திப்பாகவும் இருக்கிறது மயிலாடுதுறை நகராட்சி. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நீண்ட காலமாக தங்களை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். நியமனம்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பியாக ஸ்ரீநாதாவை தமிழகஅரசு நியமித்துள்ளது. கன்னியாகுமரியில் எஸ்பியாக இருந்த ஸ்ரீநாதா ஐபிஎஸ் சிபிசிஐடி எஸ்பியாக மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.