இணையத்தில் மாணவியின் புகைப்படத்தை வெளியிட்டவர் தூக்கிட்டு தற்கொலை

 

இணையத்தில் மாணவியின் புகைப்படத்தை வெளியிட்டவர் தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் தற்கொலை செய்துகொண்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மயிலாடுதுறை அருகே குத்தாலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, சென்னையில் படிக்கும்போது தோழியின் உறவினரான மெல்வின் செல்வகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சிறுமி சொந்த ஊருக்கு வந்து படிப்பை தொடர்ந்த நிலையில், அவரிடம் செல்போன்

இணையத்தில் மாணவியின் புகைப்படத்தை வெளியிட்டவர் தூக்கிட்டு தற்கொலை

மூலம் மெல்வின் செல்வக்குமார் பேசி வந்துள்ளார். இதனை அறிந்து பெற்றோர் கண்டித்ததால் மெல்வின் செல்வகுமாருடன் பேசுவதை மாணவி நிறுத்தியுள்ளார். இந்நிலையில், மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை மெல்வின் செல்வக்குமார் சமூகவலை தலங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை சேலையூரில்

இணையத்தில் மாணவியின் புகைப்படத்தை வெளியிட்டவர் தூக்கிட்டு தற்கொலை

இருந்த மெல்வின்செல்வக்குமாரை தேடி சென்றனர். அப்போது, மெல்வின் கடந்த ஜுன் மாதம் 19ஆம் தேதி பிறந்தநாள் பார்ட்டிக்கு பெற்றோர் பணம் கொடுக்காததால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இறப்புக்கு முன்பு மாணவியின் படங்களை சமூக வலைதலங்களில் பரப்பியிருக்கலாம் என்றும், அந்த புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.