‘மாஸ்டர் படம் பாதியிலேயே நிறுத்தம்’ – கடுப்பான ரசிகர்கள்!

 

‘மாஸ்டர் படம் பாதியிலேயே நிறுத்தம்’ – கடுப்பான ரசிகர்கள்!

காரைக்காலில் தியேட்டரில் மாஸ்டர் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கு மாஸ்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பொங்கல் ட்ரீட்டாக தியேட்டர்களில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையிலும், கடந்த ஆண்டு எந்த படமும் ரிலீஸாகமல் இந்த ஆண்டு வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் மாஸ்டர் படத்திற்கு வரவேற்பு அளித்திருக்கின்றனர். பல இடங்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திண்டாடி வருகிறார்களாம்.

‘மாஸ்டர் படம் பாதியிலேயே நிறுத்தம்’ – கடுப்பான ரசிகர்கள்!

காரைக்காலில் இருக்கும் 2 தியேட்டர்களில் மாஸ்டர் படம் வெளியாகி இருக்கிறது. முருகராமு தியேட்டரில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சிக்காக ரசிகர்கள் திரண்டனர். படம் திரையிடப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களை கோபமடையச் செய்த நிலையில், ரசிகர்கள் அங்கேயே கூச்சலிட்டுள்ளனர். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டதாகவும் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட வேண்டாம் என்றும் தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனை சரி செய்ய வெகு நேரம் ஆனதால், ரசிகர்கள் மீண்டும் கூச்சலிட தொடங்கியுள்ளனர்.

‘மாஸ்டர் படம் பாதியிலேயே நிறுத்தம்’ – கடுப்பான ரசிகர்கள்!

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. ரசிகர்களின் கோபத்தை உணர்ந்த தியேட்டர் நிர்வாகம், டிக்கெட் பணத்தை திருப்பித் தருவதாகக் கூறி அவர்களை வெளியேற்றி இருக்கிறது. அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டர்களுக்கு சென்றவர்கள் உரிய பணம் கிடைக்காமல் புலம்பி தவித்துள்ளனர்.