‘பொங்கல் ட்ரீட்’ தியேட்டரில் ரிலீஸாகும் மாஸ்டர் : படக்குழுவின் அதிரடி அறிவிப்பு!

 

‘பொங்கல் ட்ரீட்’ தியேட்டரில் ரிலீஸாகும் மாஸ்டர் : படக்குழுவின் அதிரடி அறிவிப்பு!

மாஸ்டர் திரைப்படம் வரும் ஜன.13ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், கடந்த நவ.10ம் தேதி திறக்கப்பட்டன. 50% பார்வையாளர்களுடன் மட்டுமே தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இது திரைத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டரில் ரிலீஸாகுமா? அல்லது ஓடிடியில் ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்தது.

‘பொங்கல் ட்ரீட்’ தியேட்டரில் ரிலீஸாகும் மாஸ்டர் : படக்குழுவின் அதிரடி அறிவிப்பு!

ஆண்டுதோறும் நடிகர் விஜய்யின் படம் ஒன்றாவது ரிலீஸ் ஆகிவிடும். ஆனால், இந்த ஆண்டு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாததால் விஜய் ரசிகர்கள், ‘மாஸ்டர்’ ரிலீஸை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர். தியேட்டரில் 100% பார்வையாளர்களை அனுமதிக்குமாறு நடிகர் விஜய் அரசுக்கு கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம், மாஸ்டர் படம் தியேட்டர்களில் வெளியாகவிருப்பது உறுதியானாலும் கூட அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

‘பொங்கல் ட்ரீட்’ தியேட்டரில் ரிலீஸாகும் மாஸ்டர் : படக்குழுவின் அதிரடி அறிவிப்பு!

இந்த நிலையில், மாஸ்டர் படம் வரும் 13ம் தேதி தியேட்டரில் வெளியாகவிருப்பதாக எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் மாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு, விஜய் ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.