கார்ப்பரேட் நிறுவன பொருட்களை புறக்கணிக்கக் கோரி மார்க்சிஸ்ட், விசிக-வினர் ஆர்ப்பாட்டம்

 

கார்ப்பரேட் நிறுவன பொருட்களை புறக்கணிக்கக் கோரி மார்க்சிஸ்ட், விசிக-வினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் காப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியபாளையம் பேருந்து நிலையம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கார்ப்பரேட் நிறுவன பொருட்களை புறக்கணிக்கக் கோரி மார்க்சிஸ்ட், விசிக-வினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தின்போது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக, விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், அம்பானி மற்றும் அதானியின் உருவ படங்களையும், ரிலையன்ஸ் நிறுவன விளம்பரத்தையும் தீயிட்டு கொளுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.