பெண் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை…

 

பெண் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை…

கடலூர்

விருத்தாசலம் அருகே திருமணமான பெண் மர்மநபர்களால் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வண்ணான் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சின்னபிள்ளை(45). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை காலை கூலி வேலைக்கு சென்ற சின்னப்பிள்ளை மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது கணவர் ரவிச்சந்திரன் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார்.

பெண் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை…

இந்த நிலையில், வண்ணான்குடிகாடு பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் டிஎஸ்பி மோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, சின்னப்பிள்ளை அரை நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

இதனையடுத்து, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னபிள்ளையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, உடலை கரும்பு தோட்டத்தில் வீசியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.