தேனி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

தேனி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தேனி

தேனி மாவட்டம் கூடலூரில் திருமணமான இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் பூச்சிதேவர் சந்து பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (23). இவர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் லக்கி வர்ஷன் (5), மித்ரன் (2) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், புவனேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

தேனி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடைய வில்லை. இதனால், மன வேதனையில் இருந்து வந்த புவனேஸ்வரி, தனது பெற்றோரிடம் கூறி புலம்பி வந்துள்ளார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்து உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் வலி ஏற்பட்டதால் அதனை பொறுக்க முடியாம் தவித்த புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது அம்மா ஜோதி அளித்த புகாரின் பேரில், கூடலூர் வடக்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.