திருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு முறை மீண்டும் சேர்ப்பு… ஆனா ஒரு முக்கிய கண்டிஷன்

 

திருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு முறை மீண்டும் சேர்ப்பு… ஆனா ஒரு முக்கிய கண்டிஷன்

கொரனோ பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ- பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் திருமணம் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே பாஸ் வழங்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்கான பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி இ- பதவிலிருந்து திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு முறை மீண்டும் சேர்ப்பு… ஆனா ஒரு முக்கிய கண்டிஷன்

இந்நிலையில் புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டது. அதன்படி திருமண நிகழ்விற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும் எனவும் ஒபத்திரிகையில் உள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு சான்றிதழை பெற முடியும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, மணமகள், மணமகன், தாய், தந்தை, உள்ளிட்டோரே இ-பதிவு செய்ய முடியும். அதுமட்டுமின்றி, இ-பதிவின்போது திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.