இன்டர்வியூக்கு வந்த பெண் -ஹோட்டலுக்கு கூட்டி போன மேனேஜர்-அடுத்து நடந்த கொடுமை

 

இன்டர்வியூக்கு வந்த பெண் -ஹோட்டலுக்கு கூட்டி போன மேனேஜர்-அடுத்து நடந்த கொடுமை

இன்டெர்வியுக்கு வந்த ஒரு பெண்ணை, ஒருவர் ஹோட்டலில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

இன்டர்வியூக்கு வந்த பெண் -ஹோட்டலுக்கு கூட்டி போன மேனேஜர்-அடுத்து நடந்த கொடுமை

உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் கார்கோடா பகுதியில் வசிக்கும் ஒரு 24 வயதான பெண் பட்டப்படிப்பு படித்து விட்டு வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார் .இதனால் அந்த பெண்ணுக்கு தெரிந்த ஒரு பெண்  அவரை ஒரு  நிறுவனத்தின் மேனேஜரிடம் இன்டர்வ்யூக்கு அனுப்பி வைத்தார் .

கடந்த பிப்ரவரி 15ம் தேதியன்று அந்த பெண்ணும் இன்டெர்வியுக்கு தன்னை தயார் படுத்திகொண்டு அந்த மேனேஜரை பார்க்க போனார் .ஆனால் அந்த மேனேஜர் அந்த பெண்ணை இன்டெர்வியு செய்யாமல் அருகிலுள்ள   ஒரு ஹோட்டலுக்கு கூட்டி சென்றார் .பிறகு அவர் அந்த பெண்ணுக்கு குடிக்க மயக்க மருந்து கலந்த கூல் ட்ரிங்ஸை கொடுத்தார் .அந்த  குளிர் பானத்தை வாங்கி குடித்த அந்த பெண்ணுக்கு மயக்கம் வந்துள்ளது .பின்னர் மயங்கிய அந்த பெண்ணை அந்த மேனேஜர் அந்த ஹோட்டலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .அப்போது அவர் அந்த பலாத்கார சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளார் .பிறகு அந்த பெண் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தார் .பிறகு இது  பற்றி  அந்த மேனேஜரிடம் கேட்டபோது ,அதற்கு அந்த நபர் இந்த விவகாரத்தை தான் வீடியோ எடுத்து  வைத்துள்ளதாகவும்,இதை வெளியே சொன்னால் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியீடுவதாகவும் மிரட்டினார் .அதை  கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த  பெண் பயந்து போய் அங்கிருந்து ஓடி விட்டார் .பிறகு அவர் அந்த நபர் மீது நடவடிக்கை  எடுக்க அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .ஆனால் அங்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் அவர் முதல்வரிடம் மனு கொடுத்துள்ளார்

இன்டர்வியூக்கு வந்த பெண் -ஹோட்டலுக்கு கூட்டி போன மேனேஜர்-அடுத்து நடந்த கொடுமை