“இந்த உடம்பை காமிச்சிதானே உன் காலடியில் விழ வச்சே” -கள்ள காதலியின் உடலை கூறு போட்ட காதலன்

 

“இந்த உடம்பை காமிச்சிதானே உன் காலடியில் விழ வச்சே” -கள்ள காதலியின் உடலை கூறு போட்ட காதலன்

மும்பையில் தனது கள்ள காதலியை கொலை செய்து, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டிய காதலனுக்கு ஏழு ஆண்டுகள் கழித்து மும்பையில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது .

“இந்த உடம்பை காமிச்சிதானே உன் காலடியில் விழ வச்சே” -கள்ள காதலியின் உடலை கூறு போட்ட காதலன்


இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
மும்பையை சேர்ந்த பிரபாகர் ஷெட்டி.என்பவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, செம்பூர் ஜிம்கானாவில் ஒரு உணவகத்தின் மேலாளராக பணிபுரிந்தார். அப்போது அவர் காந்தா ஷெட்டி என்ற மணமாகி தனியே குழந்தையுடன் வசிக்கும்பெண்ணை காதலித்தார்
அவர் காந்தாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதால் அவரை பலமுறை திருமணத்திற்காக மிரட்டினார். ஆனால் அந்த பெண் கல்யாணத்திற்கு சம்மதிக்காததால் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்துள்ளார்
அதன் பிறகு உள்ளூர்வாசிகள் சிலர் அவர் காந்தாவின் உடற்பகுதியைக் கொட்டுவதைக் கண்டு புகாரளித்ததும் ஷெட்டி கைது செய்யப்பட்டார். அக்டோபர் 29, 2013 இரவு குற்றவாளி பிரபாகர் காந்தாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் காதலியின் உடலை வாஷ்ரூமில் கத்தியால் நறுக்கி, தலையை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் காதலன் பிரபாகர் காந்தாவின் உடற்பகுதியை மற்றொரு பையில் அடைத்து, அவளது கால்களை இன்னொரு பையில் அடைத்தார். அந்த நபர் மூன்று பைகளையும் வெவ்வேறு இடங்களில் கொட்டினார்.

மறுநாள் வரை அந்தப் பெண் காந்தா வீடு திரும்பாததால், அவரது சகோதரி போலீஸை அணுகி புகார் அளித்தார். விசாரணையில் காந்தாவும் பிரபாகர் ஷெட்டியும் ஒரு கள்ள உறவில் இருப்பது தெரியவந்தது.ஏழு ஆண்டாக இந்த வழக்கு விசாரணை நடந்தது .கடந்த செவ்வாயன்று, முதன்மை நீதிபதி எஸ்.பி.அகர்வால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் , ரூ .1.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் .

“இந்த உடம்பை காமிச்சிதானே உன் காலடியில் விழ வச்சே” -கள்ள காதலியின் உடலை கூறு போட்ட காதலன்