காதலனை கட்டிப்பிடித்த மனைவி -அவர்களை கட்டி போட்ட கணவன் -அடுத்து வாட்ஸ் அப்பால் வந்த விளைவு
மனைவியையும் அவரின் காதலனையும் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்
குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தின் சூரத் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் ஒரு கணவனும் மனைவியும் வசித்து வந்தனர் .அந்த கணவனுக்கு அந்த மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்தது .இதனால் இருவருக்குள்ளும் சண்டையும் வந்தது .அதன் பிறகு அந்த பெண் அவரிடம் கோபித்துக்கொண்டு தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்று விட்டார் .அப்போது முதல் அந்த கணவர் அந்த மனைவியை கண்காணிக்க தொடங்கினார் .
இந்நிலையில் சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று அந்த பெண் தன்னுடைய காதலனை தன்னை சந்திக்க ஒரு இடத்துக்கு வருமாறு கூறியுள்ளார் .அதனால் அந்த காதலன் அங்கு சென்று ,அந்த பெண்ணை சந்தித்து பேசி கொண்டிருந்தார் .இதையறிந்த அந்த பெண்ணின் கணவர் அந்த இடத்திற்கு சென்றார் .பின்னர் இருவரையும் பிடித்து ஒரு மரத்தில் கட்டி வைத்தார் .அதன் பிறகு இருவரையும் ஒரு கட்டையால் கடுமையாயாக தாக்கினார் .இதை அந்த ஊரிலுள்ளோர் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விட்டார்கள் .அதனால் போலீசுக்கும் தெரிய வந்தது
பின்னர் அந்த வீடியோவைப் பற்றி காவல்துறையினர் அறிந்ததும், அவர்கள் அந்தப் பெண்ணின் காதலரை அழைத்து புகார் பதிவு செய்யச் சொன்னார்கள்.அந்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்து , பிறகு ஜாமீனில் விடுத்தார்கள்