மணமகனுக்கு கொரோனா : திருமணத்திற்கு வந்த 63 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
Jun 16, 2020, 08:51 IST1592277668000
மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் 22 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவருக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நெகட்டிவ் என்று சோதனை முடிவு வந்த நிலையில் தற்போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாப்பிள்ளை மற்றும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 63 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே இங்கு 1911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 61 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.