தற்கொலை செய்து கொண்ட இளைஞர் : போலீசாரிடம் சிக்கிய கடிதம்!

 

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் :  போலீசாரிடம் சிக்கிய கடிதம்!

காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் பிரபாகரன். நாகப்பட்டினத்தை சேர்ந்த இவர் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மாடியில் உள்ள அறையில் தங்கி வேலைப்பார்த்து வந்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் :  போலீசாரிடம் சிக்கிய கடிதம்!

இந்நிலையில் நேற்றிரவு வேலை முடிந்து அறைக்குத் தூங்கச் சென்றுள்ளார். பிரபாகரனை இன்று காலை அவருடன் வேலை செய்யும் தெய்வமணி என்பவர் எழுப்ப சென்றுள்ளா.ர் அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரபாகரன் தூக்கில் சடலமாக இருந்ததை அவரது நண்பர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் :  போலீசாரிடம் சிக்கிய கடிதம்!

மேலும் பிரபாகரன் அறையில் இருந்து ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது. அதில் தான் ஒரு பெண்ணை காதலித்ததாவும், அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்து விட்டது. இதனால் அந்த பெண்ணை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதியுள்ளார். அத்துடன் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அம்மா நீயே எனக்கு தாயாகவேண்டும் . உங்களை கடைசி காலம் வரை பார்த்துக் கொள்ள முடியாத பாவியாகி விட்டேன் என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.