கேமராவில் இருந்து தப்பிக்க குடைபிடித்தபடி பைக்கை திருடிய நபர்; காட்டிக் கொடுத்த சிசிடிவி!

 

கேமராவில் இருந்து தப்பிக்க குடைபிடித்தபடி பைக்கை திருடிய நபர்; காட்டிக் கொடுத்த சிசிடிவி!

புதுக்கோட்டை அருகே பைக்கை திருட குடைப்பிடித்த படி வந்த நபரை சிசிடிவி கேமரா காட்டிக் கொடுத்துள்ளது.

புதுக்கோட்டை, நெல்லுமண்டி தெருவில் நகை பட்டறை நடத்தி வரும் ராஜீவ்காந்தி என்பவர், தனது கடை வாசலிலேயே தனது யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை விடுவது வழக்கம். அதே போல, நேற்று இரவும் வண்டியை வெளியே விட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளார். அந்த இடத்தில் அவரது வண்டியுடன், மற்ற சில பைக்குகளை நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அந்த பைக்குக்கு அருகே குடைபிடித்த படி வந்த திருடன், பைக்கின் சைட் லாக்கை உடைக்க முயற்சி செய்து முடியாததால், அங்கிருந்து சென்றார். கேமராவில் தனது முகம் பதியக்கூடாது என திட்டமிட்டு அவர் குடையுடன் வந்திருக்கிறார்.

கேமராவில் இருந்து தப்பிக்க குடைபிடித்தபடி பைக்கை திருடிய நபர்; காட்டிக் கொடுத்த சிசிடிவி!

அந்த திருடனை தொடர்ந்து முகத்தில் துணி கட்டிக் கொண்டு வந்த திருடன், காலால் உதைத்து சைடு லாக்கை உடைத்து ராஜீவ்காந்தியின் பைக்கை அங்கிருந்து தள்ளிக் கொண்டே சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருந்த நிலையில், அவை தற்போது வெளியாகியுள்ளது.

தனது பைக் திருட்டு போனது தொடர்பாக ராஜீவ்காந்தி அளித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பைக்கை திருடிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பைக் திருட்டு தொடர்பாக விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.