“கணவன் மனைவியா வாழணும் ,இல்லேன்னா காதலர்களா சாகணும் ” -கொலை வெறியாக மாறிய காதல் வெறி

 

“கணவன் மனைவியா வாழணும் ,இல்லேன்னா காதலர்களா சாகணும் ” -கொலை வெறியாக மாறிய காதல் வெறி


ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலித்த ஒருவர், அந்த பெண் தன்னுடைய காதலை ஏற்க மறுக்காத ஆத்திரத்தில், கத்தியால் அந்த பெண்ணை குத்திவிட்டு ,தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

“கணவன் மனைவியா வாழணும் ,இல்லேன்னா காதலர்களா சாகணும் ” -கொலை வெறியாக மாறிய காதல் வெறி


ஆந்திராவின் விஜயவாடாவில் திவ்யதேஜஸ்வினி என்ற பெண் என்ஜினீயரிங் படித்து வருகிறார் .அவரை அந்த பகுதியை சேர்ந்த நாகேந்திரபாபு என்பவர் காதலித்து வந்துள்ளார் .இதனால் அவர் அந்த பெண்ணிடம் தன்னுடைய காதலை பலமுறை தெரிவித்தும் அவர் அதை கண்டுகொள்ளவில்லையாம் .
இதனால் கடந்த வியாழக்கிழமையன்று அந்த பெண்ணின் வீட்டிற்குள் சென்று நாகேந்திரபாபு ஒளிந்து கொண்டார் .அப்போது சிறிது நேரம் கழித்து அந்த பெண் வெளியே வந்தபோது கத்தியால் அவரை பலமுறை குத்தியுள்ளார் .இந்த தாக்குதலில் அந்த பெண் பலத்த காயமடைந்தார் .அப்போது அனைவரும் ஓடிவந்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கூட்டி செல்ல முற்ப்படும்போது ,யாரும் எதிர்பாராவிதமாக அந்த வாலிபரும் தன்னை பலமுறை அதே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் .
இதனால் பலத்த காயமடைந்த இருவரையும் குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர் .அப்போது அந்த பெண் போகும் வழியிலேயே இறந்தார் .அந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .இந்த தாக்குதல் பற்றி கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

“கணவன் மனைவியா வாழணும் ,இல்லேன்னா காதலர்களா சாகணும் ” -கொலை வெறியாக மாறிய காதல் வெறி