“நீ காதலியோட மனசுல நுழையலாம் ,ஊருக்குள் நுழைய முடியாது” -காதலித்த வாலிபருக்கு நேர்ந்த கதி

 

“நீ காதலியோட மனசுல நுழையலாம் ,ஊருக்குள் நுழைய முடியாது” -காதலித்த வாலிபருக்கு நேர்ந்த கதி


வேறு சாதி பெண்ணை மணந்த ஒருவரை அந்த பெண்ணின் சகோதர்கள் வெட்டி கொலை செய்த சம்பவத்தால் அந்த பகுதி பதட்டமாக உள்ளது

“நீ காதலியோட மனசுல நுழையலாம் ,ஊருக்குள் நுழைய முடியாது” -காதலித்த வாலிபருக்கு நேர்ந்த கதி


உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் கிதோர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெசுபூர் ஜானுவி கிராமத்தில் வசிக்கும் மன்ஷாரம் என்பவரின் மகன் 28 வயதான ஷ்ரவன் .இவர் அதே ஊரை சேர்ந்த வேறு சாதி பெண்ணை காதலித்து வந்துள்ளார் .இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் சகோதர்களை கோபமடைய செய்தது .இதனால் அவர்கள் அந்த ஷ்ரவனிடம் இந்த காதலை கை விடுமாறு பலமுறை கூறினர் .ஆனால் அவர்களின் எச்சரிக்கையை மீறிய ஷ்ரவன் அந்த காதலியை மூன்றாண்டுகளுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்டார் .இதனால் அந்த பெண்னின் சகோதரர்கள் அந்த காதலனை ஊருக்குள் வந்தால் வெட்டுவோம் என்று மிரட்டினார்கள்
அதன் பின்னர் அந்த காதல் ஜோடி அந்த ஊரை விட்டு வெளியேறி , பில்குவா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கினர். பிறகு அவர்களின் வீட்டில் நடந்த ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஷ்ரவன் கடந்த திங்கள்கிழமை கிராமத்திற்கு வந்திருந்தார்.
இதை கேள்விப்பட்ட அந்த காதலியின் சகோதரர் அமித், அங்கித் மற்றும் கோஷ்லேந்திரா ஆகியோர் ஷ்ரவன் வீட்டிற்கு வந்து அவரை பல முறை கத்தியால் குத்தினர்.அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த அவரின் தாயார் அதை பார்த்து அலறினார் .அதன் பிறகும் அந்த கூட்டம் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு ஓடியது .இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்புக்குள்ளாகியது .பின்னர் போலீசார் வந்து விசாரித்து அவரை கொன்ற கூட்டத்தை கைது செய்துள்ளார்கள் .பின்னர் அந்த ஷ்ராவனின் தந்தை இந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்குவோம் என்று கூறினார்.

“நீ காதலியோட மனசுல நுழையலாம் ,ஊருக்குள் நுழைய முடியாது” -காதலித்த வாலிபருக்கு நேர்ந்த கதி