“பக்கவாதத்தால் படுத்த தாயை ,பக்காவா பிளான் போட்டு கொன்ற மகன்”-அவரின் பிளானை கேட்டா அதிர்ச்சியடைவிங்க..

 

“பக்கவாதத்தால் படுத்த தாயை ,பக்காவா பிளான் போட்டு கொன்ற மகன்”-அவரின் பிளானை கேட்டா அதிர்ச்சியடைவிங்க..

உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள கானா காது கிராமத்தில் இக்பால் என்ற நபர் தன்னுடைய 80 வயதான பக்கவாதம் பாதிக்கப்பட்ட தாயோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அவரால் அவரின் தாயை பராமரிப்பது அவருக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது .இதனால் அவரை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் விழித்தார் ,அப்போது அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் உதவியோடு அவரை கொல்ல முடிவு செய்தார் .

“பக்கவாதத்தால் படுத்த தாயை ,பக்காவா பிளான் போட்டு கொன்ற மகன்”-அவரின் பிளானை கேட்டா அதிர்ச்சியடைவிங்க..
இந்நிலையில் அந்த ஊரில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே கலவரம் வெடித்தது ,அப்போது இரண்டு குழுக்களை சேர்ந்த பலரும் காயமடைந்தார்கள் ,அப்போது அந்த காயமடைந்த நபர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் போது இக்பால் வீட்டில் பக்கவாதத்தால் படுத்திருக்கும் தன்னுடைய தாயையும் அழைத்து சென்றுள்ளார் .ஹாஸ்ப்பிட்டலுக்கு செல்லும் வழியில் தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் தன்னுடைய தாயை கற்கள் கொண்டு தலையில் அடித்து காயமடைய செய்து ,பிறகு அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் .பிறகு அவரை ஊர் கலவரத்தில் காயமடைந்து மயக்கமாகியுள்ளார் என்று ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தார் .
அங்கு அவரின் தாய் இறந்த நிலையிலிருப்பதினை கண்டறிந்த டாக்டர்கள் அவரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த போது, அவர் கழுத்தினை நெரித்து கொலை செய்யப்பட்டதை கண்டறிந்து அவரின் மகன் இக்பால் மீது போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி அவரின் மகன் இக்பாலை கைது செய்தார்கள் .

“பக்கவாதத்தால் படுத்த தாயை ,பக்காவா பிளான் போட்டு கொன்ற மகன்”-அவரின் பிளானை கேட்டா அதிர்ச்சியடைவிங்க..