சத்தம் போட்டு விளையாடிய மகள்கள் தந்தையால் அடித்துக்கொலை ! உத்தரபிரதேசத்தில் துயரம் !

 

சத்தம் போட்டு விளையாடிய மகள்கள் தந்தையால் அடித்துக்கொலை ! உத்தரபிரதேசத்தில் துயரம் !

உத்தரபிரதேசத்தில் சத்தம் போட்டு விளையாடிய ஐந்து வயது மற்றும் 2 வயது மகள்கள் கொல்லப்பட்டனர். இதனால் சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள் ஈத் பண்டிகை கொண்டாடவில்லை.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு சாண்ட் கபீர் நகரில் உள்ள பனெத்து கிராமத்தில் நடந்துள்ளது. குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தம் போட்டு விளையாடிய மகள்கள் தந்தையால் அடித்துக்கொலை ! உத்தரபிரதேசத்தில் துயரம் !

போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 35 வயதான ஜைனுல் அப்தீன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி ஷாஹிதாவை விவாகரத்து செய்திருந்தார், ஆனால் அவரது மகள்கள் மோசிபா, 5, மற்றும் அல்சிபா, 2, அவருடன் வசித்து வந்தனர்.

“ஞாயிற்றுக்கிழமை இரவு, சிறுமிகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சத்தம் போட்டு விளையாடியதால் தந்தை கோபம் அடைந்துள்ளார். இதனால் ஜைனுல் அருகில் கிடந்த ஒரு செங்கலை எடுத்து அவர்கள் இறக்கும் வரை சிறுமிகளின் தலையை அடித்து நொறுக்கினார். தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜைனுலை கைது செய்தனர்.