5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

 

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் கடந்த 2013ஆம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 29 வயது இளைஞர் பூபாலன் வழக்கில் 8 ஆண்டுகள் கழித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

புதுவண்ணாரப்பேட்டை வா.உ. சி நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது உடைய இளைஞர் பூபாலன், அதே பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி உள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளரின் ஐந்து வயது மகளை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் திருவொற்றியூர் மகளிர் காவல் நிலைய போலீசார் பூபாலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். குற்றம் நிரூபிக்கப்படாததால் கடந்த 2013 ஆம் ஆண்டுமுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டு வந்தன. 8 ஆண்டுகளாக நடைப்பெற்ற வழக்கில் தற்பொழுது பூபாலன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 5 வருடம் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மகிளா நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.