கொரோனா காலத்தில் தொடரும் தற்கொலைகள்… காதலால் நேர்ந்த விபரீதம்!

 

கொரோனா காலத்தில் தொடரும் தற்கொலைகள்… காதலால் நேர்ந்த விபரீதம்!

காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாக குற்றம்சாட்டிய நபர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, செல்பி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். மூன்று நாட்கள் முன்பு நடந்த சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.

கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமராம் நகரை சேர்ந்த கனகாராவ் என்ற நபர் தான் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோவில் கூறியுள்ளார். தற்கொலை செய்து கொண்ட அந்த நபரின் உடல் பீமாராமில் உள்ள ரயில் தடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் அந்தப் பெண் மற்றும் அவரது மரணத்திற்கு காரணமான மற்றொரு நண்பர் மீதும் நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்றும் கனகாராவ் கோரியுள்ளார்.

கொரோனா காலத்தில் தொடரும் தற்கொலைகள்… காதலால் நேர்ந்த விபரீதம்!

தற்கொலை செய்வதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவை தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். பீமாவரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.