ஏணி வழியே பாய்ந்த மின்சாரம்; உடல்கருகி ஒருவர் பரிதாப மரணம்!
Sep 4, 2021, 16:17 IST1630752470000
மன்னார்குடி அருகே இரும்பு ஏணியில் மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சிறுமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜசேகரன். இவரது உறவினர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவரது படத்திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்காக ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பணியில் ராஜசேகரன் ஈடுபட்டிருந்தார். இரும்பு ஏணியை தூக்கிக் கொண்டு அவர் மேலே சென்ற போது உயர் மின்னழுத்த கம்பி மீது ஏணி உரசியது. ஏணி வழியாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ராஜசேகரன் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் ராஜசேகரனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.