சிலிண்டர் வெடித்து விபத்து: உடல் கருகி ஒருவர் பலி!

 

சிலிண்டர் வெடித்து விபத்து: உடல் கருகி ஒருவர் பலி!

ஈரோடு மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பரவியதில் இருந்தே எங்கே பார்த்தாலும் பல துயர சம்பவங்கள் நடந்து வருகின்றன. இயற்கை சீற்றம், சாலை விபத்து. யானை தாக்குதல், தற்கொலை என பல்வேறு சம்பவங்களால் பலர் உயிரிழக்கின்றனர். இன்று காலை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் குரங்குச்சாவடியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்திலேயே மேலும் ஒரு விபத்து நடந்திருக்கிறது.

சிலிண்டர் வெடித்து விபத்து: உடல் கருகி ஒருவர் பலி!

சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டி பகுதியில் தீ தடுப்பு உபகரண விற்பனை மையத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கிய ஊழியர் முருகன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர், சிலிண்டரின் நைட்ரஜன் வாயு நிரப்பும் போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.