‘மகன் கொலை’ மன உளைச்சலில் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

 

‘மகன் கொலை’ மன உளைச்சலில் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

சீர்காழி அருகே மகன் கொலை செய்யப்பட்ட மன உளைச்சலில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் பகுதியில் வசித்து வந்தவர் சேகர். இவரது மகன் சந்தோஷ் கடந்த 10 நாட்களுக்கு முன்னர், சென்னை செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார். ஆனால் அவர் சென்னைக்கு செல்லவில்லை என்பதை அறிந்த சேகர், சந்தோஷை பல இடங்களில் தேடியிருக்கிறார். அப்போது, கடலூர் புறவழிச்சாலை அருகே சந்தோஷ் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

‘மகன் கொலை’ மன உளைச்சலில் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவரது நண்பர்களே பணத்திற்காக கொலை செய்தது தெரிய வந்துள்ளது. சந்தோஷ் கொலையில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சந்தோஷ் கொலை செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சேகர் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

‘மகன் கொலை’ மன உளைச்சலில் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மகன் கொலை செய்யப்பட்ட 10 நாட்களில் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.