மது குடிக்க அனுமதிக்காத மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு!

 

மது குடிக்க அனுமதிக்காத மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு!

அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது நடந்துள்ள மற்றொமொரு தற்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மது அருந்தக்கூடாது என்று வலியுறுத்தியதால் ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல்களின்படி, பல்லியாவைச் சேர்ந்த சஞ்சய் ஜா, மங்கோல்பூரி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பாதுகாப்பு காவலராக பணியாற்றி வருகிறார். அவர் தனது மனைவி வந்தனா ஜாவுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். சனிக்கிழமை மாலை சஞ்சய் மது அருந்த சென்ற போது வந்தனா அதை தடுத்துள்ளார். இதையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மது குடிக்க அனுமதிக்காத மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு!

பின்னர் வந்தனா பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது கணவர் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தொங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். கணவரின் உடலைப் பார்த்து வந்தனா அலறியதால் பக்கத்து வீட்டினர் விரைந்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தகவலை அடைந்து உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

டிராமிகா நகர காவல் நிலைய எஸ்.எச்.ஓ ரமேஷ் சந்த் ராணா கூறுகையில், “அந்த நபர் மதுவுக்கு அடிமையானவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் மது அருந்துவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அநேகமாக இதன் காரணமாக, அவர் தற்கொலை செய்திருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.