“குறட்டையின் கொடுமைய பார்த்திங்களா”குறட்டை விட்ட தந்தை -தூங்க முடியாமல் தவித்த மகன் -தந்தையை அடித்து கொலை செய்தார்.

 

“குறட்டையின் கொடுமைய பார்த்திங்களா”குறட்டை விட்ட தந்தை -தூங்க முடியாமல் தவித்த மகன் -தந்தையை அடித்து கொலை செய்தார்.

உத்தரபிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் ராம் ஸ்வரூப் என்ற 65 வயது தந்தை, மூத்த மகன் நவீன்,மற்றும் இளைய மகன் மனோஜ் ஆகியோருடன் வசித்து வந்தார்..இதில் அவர்களின் தந்தை ராம் ஸ்வரூப்க்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருந்துள்ளது .இதனால் அவரின் பக்கத்தில் யாரும் படுக்க முடியாது, அந்த அளவுக்கு அவரின் குறட்டை சத்தம் காதை கிழிக்கும் .

“குறட்டையின் கொடுமைய பார்த்திங்களா”குறட்டை விட்ட தந்தை -தூங்க முடியாமல் தவித்த மகன் -தந்தையை அடித்து கொலை செய்தார்.
இந்நிலையில் அவரின் மனைவி மற்றும் இளைய மகன் மனோஜ் செவ்வாய் கிழமை வெளியூர் சென்றதால் ,தந்தைக்கு துணையாக அவரின் மூத்த மகன் நவீண் அவரின் அருகில் படுத்து தூங்கியுள்ளார் .அப்போது
அவரின் தந்தையின் குறட்டை சத்தம் வழக்கம்போல அருகேயிருந்த நவீனை தூங்க விடவில்லை .இதனால் கடுப்பான நவீன் தூக்கத்திலிருந்து எழுந்து தன்னுடைய தந்தையிடம் குறட்டை விடாமல் தூங்குமாறு கேட்டுகொண்டார் .ஆனால் மீண்டும் அவர் குறட்டை விட்டுக்கொண்டு தூங்கியதால், கோபமுற்ற நவீன் அருகிலிருந்த ஒரு தடியை எடுத்து தன்னுடைய தந்தையின் தலையில் தாக்கினார் ,இதில் கடுமையான காயமுற்ற அவரின் தந்தை அங்கேயே இறந்தார் .
இந்த தகவல் கேள்விப்பட்ட அவரின் இளைய மகன் மனோஜ் அவரின் சகோதரர் மீது தந்தையை கொலை செய்ததாக போலீசில் புகாரளித்தார் .போலீசார் விரைந்து விசாரணை நடத்தி, நவீனை கைது செய்து சிறையிலடைத்தனர்

“குறட்டையின் கொடுமைய பார்த்திங்களா”குறட்டை விட்ட தந்தை -தூங்க முடியாமல் தவித்த மகன் -தந்தையை அடித்து கொலை செய்தார்.