கொழுந்தியாளுக்கு ரூட்டு போட்ட மருமகன் -தலையை துண்டாக்கிய மாமனார் -துண்டித்த தலையோடு போலீசில் சரண் .

 

கொழுந்தியாளுக்கு ரூட்டு போட்ட மருமகன் -தலையை துண்டாக்கிய மாமனார் -துண்டித்த தலையோடு போலீசில் சரண் .

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வசிக்கும் சூர்யநாராயணா என்பவர் லட்சனா என்ற பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவரின் மனைவி லட்சனா சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்துள்ளார் .

கொழுந்தியாளுக்கு ரூட்டு போட்ட மருமகன் -தலையை துண்டாக்கிய மாமனார் -துண்டித்த தலையோடு போலீசில் சரண் .
இப்போது அந்த சூர்யநாராயணா தன்னுடைய மாமனார், அதாவது இறந்த மனைவி லட்சனாவின் தந்தையிடம் சென்று அவரின் இளைய மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார் .இதனால் கடுப்பான அவரின் மாமனார், தாம் அவருக்கு தன்னுடைய இளைய மகளை கல்யாணம் செய்து கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார் .’ஏன் எனக்கு என்ன குறைச்சல் எனக்கு எதனால் உங்களின் இளைய மகளை கட்டி தர மறுக்கிறீர்கள்’ என்று அவர் கேட்ட போது ,அதற்கு அவரின் மாமனார் ‘பெரிய மகளை உங்களுக்கு கட்டிக்கொடுத்துவிட்டு நான் பட்ட துன்பங்கள் போதும் இன்னொரு மகளையும் நான் உங்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விட்டு அவளையும் நான் இழக்க தயாராக இல்லை’ என்று திட்டியுள்ளார் .ஆனால் அதற்கெல்லாம் மசியாத அவரின் மருமகன் மீண்டும் மீண்டும் அவரின் வீட்டிற்கு வந்து அவரிடமும் ,அவரின் மகளிடமும் வம்பு செய்துள்ளார் .

இதனால் கோபமுற்ற அவரின் மாமனார், மருமகனின் தலையை சீவி ,அந்த வெட்டிய தலையோடு நேராக போலீஸ் ஸ்டேஷனில் போய் சரணடைந்துள்ளார் .போலீசார் வெட்டிய தலையுடன் ஒருவர் காவல் நிலையத்திற்கு வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர் ,பிறகு போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

கொழுந்தியாளுக்கு ரூட்டு போட்ட மருமகன் -தலையை துண்டாக்கிய மாமனார் -துண்டித்த தலையோடு போலீசில் சரண் .