மாட்டை கொடுமை செய்த வாலிபர் -தடுத்த பதினேழு வயது பெண் -அடுத்து பெண்ணுக்கு நேர்ந்த நிலை .

 

மாட்டை கொடுமை செய்த வாலிபர் -தடுத்த பதினேழு வயது பெண் -அடுத்து பெண்ணுக்கு நேர்ந்த நிலை .

பசு மாட்டை அடித்து கொடுமை செய்த ஒரு வாலிபரை தட்டிக்கேட்ட பெண்ணை அந்த வாலிபர் தாக்கி காயப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது .

மாட்டை கொடுமை செய்த வாலிபர் -தடுத்த பதினேழு வயது பெண் -அடுத்து பெண்ணுக்கு நேர்ந்த நிலை .

குஜராத்தின் அகமதாபாத்தில் வசிக்கும் விஷால் தாக்கோர்  என்ற வாலிபர் அந்த பகுதியில் ஒரு பசு மாட்டை வளர்க்கிறார் .இந்நிலையில் கடந்த வாரம் திங்கள் கிழமையன்று அவர் அந்த பசுமாட்டை அடித்து கொடுமை செய்தார் .அப்போது அந்த மாடு வலி தாங்க முடியாமல் கத்தியது .அப்போது அதே பகுதியில் வசிக்கும் 17 வயதான டீனேஜ் பெண்ணொருவர் கோவிலுக்கு போய் விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் .அப்போது அந்த வாலிபர் மாட்டை கொடுமை செய்வதை பார்த்து மனம் பொறுக்க  முடியாமல் அந்த வாலிபரை தடுத்தார் .

அதனால் கோவப்பட்ட அந்த தக்கோர், உடனே அந்த மாட்டை விட்டு விட்டு ,அந்த கட்டையால் அந்த பெண்ணை தாக்க தொடங்கினார் .இதில் அந்த பெண் பலத்த காயமுற்றார் . .

பின்னர் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை அதே பகுதியில் இருக்கும் ஒரு ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் ,அங்கு அந்த பெண் தீவிர சிகிச்சையில் இருக்கிறார் .பின்னர் அந்த பெண்ணை தாக்கிய தக்கோர் மீது அந்த பெண்னின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார் .போலிசார்  வழக்கு பதிந்து  அந்த தாக்கூரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .