“கொதிக்கும் எண்ணெயை கொட்டி வெந்து போச்சே ” -கோபமான மனைவி செஞ்ச வேலையால் கதறும் கணவர் .

 

“கொதிக்கும் எண்ணெயை கொட்டி வெந்து போச்சே ” -கோபமான மனைவி செஞ்ச வேலையால் கதறும் கணவர் .


ஒரு கணவன் தினமும் லேட்டா வீட்டுக்கு வந்ததால் கோபமான மனைவி அவரின் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை கொட்டி கொடுமை செய்தார்

“கொதிக்கும் எண்ணெயை கொட்டி வெந்து போச்சே ” -கோபமான மனைவி செஞ்ச வேலையால் கதறும் கணவர் .

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் வசிக்கும் சிவ்குமாரி அஹிர்வார் என்ற மனைவியோடு அவரது கணவர் அரவிந்த் அஹிர்வார் வசித்து வந்தார் .அந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை வருமாம் .இதற்கு காரணம் என்னவென்றால் அவரின் கணவர் தினமும் வேலை முடிந்து நேராக வீட்டிற்கு வராமல் நண்பர்களோடு சுற்றிவிட்டு தினமும் லேட்டாக வந்துள்ளார் .
அதனால் கோபமான அவரின் மனைவி, அவரிடம் பலமுறை சீக்கிரம் வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார் .ஆனால் அவரின் கணவர் அரவிந்த் அதை பொருட்படுத்தாமல் வழக்கம் போலவே லேட்டாகவே வந்துள்ளார் .கடந்த வாரமும் அந்த கணவர் லேட்டாக இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்த போது அவரின் மனைவி சமையலறையில் எண்ணெய் சட்டியை வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார் .அப்போது லேட்டா வந்த கணவன் முகத்தில் அந்த கொதிக்கும் எண்ணையை ஊற்றினார் .இதில் பலத்த காயமடைந்த அவரின் கணவர் அலறி துடித்தார் .முகம் வெந்துபோய் கிடந்தார் .அவரின் நிலையை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .அங்கு முகம் வெந்து போன அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கபட்டு வருகிறது .அதன் பின்னர் அவரின் மனைவி மீது புகார் அளிக்கப்பட்டது .அவரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள் .அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது , தான் கோபத்தில் செய்த தவறுக்கு மனம் வருந்துவதாக கூறினார் .மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .

“கொதிக்கும் எண்ணெயை கொட்டி வெந்து போச்சே ” -கோபமான மனைவி செஞ்ச வேலையால் கதறும் கணவர் .