நாட்டின் மிகப்பெரிய கலகக்காரர் நரேந்திர மோடி… மம்தா பானர்ஜி தாக்கு..

 

நாட்டின் மிகப்பெரிய கலகக்காரர் நரேந்திர மோடி… மம்தா பானர்ஜி தாக்கு..

நாட்டின் மிகப்பெரிய கலகக்காரர் நரேந்திர மோடி என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேற்கு வங்கம் ஹூக்ளி மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய தேர்தல் பேரணியில் அந்த கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: இந்த நாட்டில் நரேந்திர மோடி மிகப்பெரிய கலகக்காரர். டிரம்ப்புக்கு என்ன நிகழ்ந்தது? அவர் (மோடி) அதனை காட்டிலும் மோசமான விதியை சந்திப்பார். வன்முறையிலிருந்து எதுவும் பெற முடியாது.

நாட்டின் மிகப்பெரிய கலகக்காரர் நரேந்திர மோடி… மம்தா பானர்ஜி தாக்கு..
மம்தா பானர்ஜி

பெங்கால் பெங்காலை ஆட்சி செய்யும். குஜராத் பெங்காலை ஆளாது. மோடி மேற்குவங்கத்தை ஆளமாட்டார். குற்றவாளிகள் மேற்கு வங்கத்தை ஆளமாட்டார்கள். பா.ஜ.க.வால் ஒரு கோல் அடிக்க முடியாது. பா.ஜ.க. கட்சி குஜராத்திலிருந்து வந்த வெளியாட்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாட்டின் மிகப்பெரிய கலகக்காரர் நரேந்திர மோடி… மம்தா பானர்ஜி தாக்கு..
பா.ஜ.க.

அந்த பேரணியில் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி இணைந்தார். மனோஜ் திவாரி பேசுகையில், பா.ஜ.க. பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்துகிறது, மம்தா பானர்ஜி மக்களை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறார். நான் கிரிக்கெட் விளையாடும்போது, நான் நாட்டுக்காக விளையாடுகிறேன். மதத்தின் அடிப்படையில் அல்ல என்று தெரிவித்தார்.