மோடி போல் ஒரு பிரதமர் உலகில் வேறெங்கும் மீண்டும் பிறக்கக் கூடாது என நான் பிரார்த்தனை செய்கிறேன்.. மம்தா பானர்ஜி தாக்கு

 

மோடி போல் ஒரு பிரதமர் உலகில் வேறெங்கும் மீண்டும் பிறக்கக் கூடாது என நான் பிரார்த்தனை செய்கிறேன்.. மம்தா பானர்ஜி தாக்கு

மோடி போல் ஒரு பிரதமர் உலகில் வேறெங்கும் மீண்டும் பிறக்கக்கூடாது என நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமா நாளை 30 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் மெதினிபூரில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

மோடி போல் ஒரு பிரதமர் உலகில் வேறெங்கும் மீண்டும் பிறக்கக் கூடாது என நான் பிரார்த்தனை செய்கிறேன்.. மம்தா பானர்ஜி தாக்கு
பிரதமர் மோடி

5 மாநிலங்களில் தேர்தல் காரணமாக எம்.பி.க்களால் அங்கு (நாடாளுமன்றத்தில்) இருக்க முடியவில்லை. டெல்லியின் அதிகாரத்தை பறிப்பதற்காக, மத்திய அரசு நள்ளிரவில் மசோதா நிறைவேற்றியது. அதிகாரத்தின் தவறான பயன்பாடு. உலகில் வேறெங்கும் இது போன்ற பிரதமர் பிறக்கக்கூடாது என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். அவருடைய கண்கள் மக்களை சூழ்ந்து கொள்ளும். அவர்களுக்கு (பா.ஜ.க) கொடுமை மற்றும் கலவரம் மட்டுமே தெரியும். அவர்கள் காந்திஜி கொலை செய்தார்கள். என் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவதை நான் தொடருவேன்.

மோடி போல் ஒரு பிரதமர் உலகில் வேறெங்கும் மீண்டும் பிறக்கக் கூடாது என நான் பிரார்த்தனை செய்கிறேன்.. மம்தா பானர்ஜி தாக்கு
பா.ஜ.க.

இந்த விளையாட்டுக்கு நீங்கள் தயாரா? உங்கள் ஜெர்சி தயாரா? நாம் அவர்களை வெளியேற்றுவோம். மத்திய அரசாங்கம் செயல்படாது. அவர்கள் இங்கு பேசுவதற்காக மட்டுமே வருகிறார்கள். அவர்கள் வாக்கு மட்டுமே கேட்கிறார்கள் ஆனால் பணியாற்ற மாட்டார்கள். நாங்கள் இலவசமாக ரேஷன் வழங்கினோம். மீண்டும் எங்களை தேர்ந்தெடுத்தால், ரேஷன் பொருட்களை உங்கள் வீட்டு வாசலில் வழங்குவோம். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.