“பிரதமரின் தாமதமான முடிவின் விலை பல லட்சக்கணக்கான உயிர்கள்” – மோடியை வறுத்தெடுத்த மம்தா!

 

“பிரதமரின் தாமதமான முடிவின் விலை பல லட்சக்கணக்கான உயிர்கள்” – மோடியை வறுத்தெடுத்த மம்தா!

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது தடுப்பூசி குறித்து பேசிய அவர், “கொரோனா நமது நாட்டின் மிகப்பெரிய எதிரி. அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி மூலம் பல லட்சகணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம். தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

“பிரதமரின் தாமதமான முடிவின் விலை பல லட்சக்கணக்கான உயிர்கள்” – மோடியை வறுத்தெடுத்த மம்தா!

ஆனால் தற்போது அதில் உள்ள சிக்கல்களை மாநில அரசுகள் உணர்ந்து விட்டன. தற்போது மத்திய அரசே இதனை செய்யட்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறுகின்றன. இதனால் மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையைத் தொடரும். ஜூன் 21ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்குள் இது அமலுக்கு வரும்” என்றார். இதனை பல்வேறு மாநில முதலமைச்சர்களும் வரவேற்றுள்ளனர்.

“பிரதமரின் தாமதமான முடிவின் விலை பல லட்சக்கணக்கான உயிர்கள்” – மோடியை வறுத்தெடுத்த மம்தா!

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என பிப்ரவரி மாதம் முதல் பல முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் 4 மாதங்களாக அவர் அதுதொடர்பாக வாய் திறக்கவில்லை. கடும் அழுத்தம் வந்த பிறகு மாநில அரசின் கருத்திற்கு அவர் செவிசாய்த்திருக்கிறார். இதனை அமல்படுத்துவதற்கு அவருக்கு 4 மாதங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

தொற்று பரவியது முதலே மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கெனவே பலரது உயிரை வாங்கிவிட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசியலாக இல்லாமல் மக்களுக்கானதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.