ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கண்டெடுப்பு
Oct 22, 2020, 17:07 IST1603366634000
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அடுத்த ஹவுசிங்போர்டு பகுதியில் சென்னை – கோயம்புத்தூர் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் மற்றும் திருப்பத்தூர் கிராமிய காவல்நிலைய போலீசார் தனித்தனியே விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.