லாக்டவுனிலும் ஷூட்டிங்… சென்னையில் ‘பிக் பாஸ் அரங்கிற்கு’ சீல்!

 

லாக்டவுனிலும் ஷூட்டிங்… சென்னையில் ‘பிக் பாஸ் அரங்கிற்கு’ சீல்!

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பிக்பாஸ் மலையாளம் சீசன்-3 ஷூட்டிங் சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. 95 நாட்களை கடந்து அந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், ஜூன் 6ஆம் தேதி ஃபைனல்ஸ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வரும், அந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 14 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 8 போட்டியாளர்கள் உள்ளே இருந்தனர்.

லாக்டவுனிலும் ஷூட்டிங்… சென்னையில் ‘பிக் பாஸ் அரங்கிற்கு’ சீல்!

மலையாளம் பிக்பாஸ் ஷூட்டிங்கில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா உறுதியானதாக அண்மையில் தகவல்கள் கசிந்தது. இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சேனல் அதற்கு மறுப்பு தெரிவித்தது. ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் தொடர்ந்து நடத்தப்படுவதை அறிந்த பூந்தமல்லி உதவி ஆணையர் சுதர்சன், வட்டாட்சியர் சங்கர் ஆகியோர் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்று நேற்று விசாரணை நடத்தினர்.

லாக்டவுனிலும் ஷூட்டிங்… சென்னையில் ‘பிக் பாஸ் அரங்கிற்கு’ சீல்!

லாக்டவுன் உத்தரவையும் மீறி ஷூட்டிங் நடத்தியதால் பிக் பாஸ் அரங்கின் உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள், ஷூட்டிங் நடைபெறும் அரங்கின் 3 நுழைவாயில்களுக்கும் சீல் வைத்தனர். உள்ளே இருந்த போட்டியாளர்கள், ஊழியர்கள் உட்பட அனைவரும் பிபிஇ கிட் அணிந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இறுதிக்கட்டத்தை எட்டிய பிக் பாஸ் மலையாளம் நிகழ்ச்சி, திடீரென நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.