மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 3,874 பேருக்கு கொரோனா உறுதி – 160 புதிய இறப்புகள்

 

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 3,874 பேருக்கு கொரோனா உறுதி – 160 புதிய இறப்புகள்

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 3,874 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 3,874 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,28,205-ஆக உள்ளது. மேலும் அம்மாநிலத்தில் 160 பேர் புதிதாக கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,984-ஐ எட்டியுள்ளது. அத்துடன் 160 பேரில் 136 பேர் கொரோனாவால் மும்பையில் மட்டும் பதிவாகியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 3,874 பேருக்கு கொரோனா உறுதி – 160 புதிய இறப்புகள்

மேலும் கொரோனா தொற்றில் இருந்து புதிதாக 1,380 நோயாளிகள் மீண்டு மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால் மாநிலத்தில் கொரோனா நோயில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 64,153-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை மொத்தம் 7,54,000 பேர் கொரோனா வைரஸுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 50.04 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 4.67 சதவீதமாகவும் உள்ளது.

மும்பை பெருநகரத்தில் இதுவரை 65,329 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3,561 பேர் உயிரிழந்துள்ளனர். புனே நகரில் 12,760 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 505 பேர் இறந்துள்ளனர்.