“வேல் யாத்திரை தடை – அரசு விளக்கம் தர வேண்டும்” – பிரேமலதா
Nov 6, 2020, 13:27 IST1604649437000
மதுரை
தமிழக பாஜகவினி வேல் யாத்திரைக்கு தடை விதித்தது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பொது
மக்களுக்கோ, சட்டம் ஒழுங்கிற்கோ, எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், அரசாங்கம் தன் கடமையை செய்யும் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், இருப்பினும் இந்த தடை குறித்த விளக்கத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், ஜனவரி முதல் வாரத்திற்குள் தேமுதிகவின் செயற்குழு கூட்டப்பட்டு, கூட்டணி தொடர்பான தெளிவான முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.