மதுரை- அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் வெட்டிக்கொலை
Oct 12, 2020, 12:14 IST1602485074000
மதுரை
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரிச்சியூர் அருகேயுள் குன்னத்தூரை சேர்ந்தவர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன். இவர் நேற்று இரவு அங்குள்ள மலையின் அருகே உறவினரான எலெக்ட்ரீசியன் முனியசாமி என்பவருடன் பேசிக்
கொண்டிருந்துள்ளார். அப்போது மர்மநபர்கள் இருவரையும் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இன்று காலை கிருஷ்ணன் மற்றும் முனியசாமி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பாயூரணி போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.