ஆட்டோவில் சென்று நகை, பணம் திருடிய 3 பெண்கள் கைது

 

ஆட்டோவில் சென்று நகை, பணம் திருடிய 3 பெண்கள் கைது

மதுரை

மதுரையில் பண்டிகை காலத்தையொட்டி ஆட்டோக்களில் சென்று நகை மற்றும் பணத்தை திருடிய 3 பெண்களை போலீசார் கைதுசெய்தனர். மதுரை மாநகரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு குற்றவாளிகள் மாநகருக்குள் புகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக, மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு துணை ஆணையர் பழனிகுமாருக்கு தகவல் வந்தது.

ஆட்டோவில் சென்று நகை, பணம் திருடிய 3 பெண்கள் கைது

இதையடுத்து, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து, மதுரை அண்ணா நகர் உதவி ஆணையர் வினோஜி உத்தரவின் பேரில், கே.புதூர் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

ஆட்டோவில் சென்று நகை, பணம் திருடிய 3 பெண்கள் கைது

அப்போது ஆட்டோக்களில் பெண்களிடம் நகை மற்றும் பணம் திருடியதாக வெளிச்சநத்தத்தை சேர்ந்த ஜோதிமணி, கவிதா மற்றும் அலங்காநல்லூரை சேர்ந்த ஜீவா ஆகிய 3 பெண்கள் பிடிபட்டனர்.
விசாரணையில் அவர்கள் 3 பேரும், சுமார் 10 சவரன் நகைகளை திருடியதும், அதனை விற்று ஒரு லட்சம் வரையில் பணமாக வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டனர்.