தேவர் ஜெயந்தி – விழாக்குழுவிடம் தங்க கவசத்தை ஒப்படைத்த துணை முதல்வர்

 

தேவர் ஜெயந்தி – விழாக்குழுவிடம் தங்க கவசத்தை ஒப்படைத்த துணை முதல்வர்

மதுரை

தேவர் ஜெயந்திவிழாவை முன்னிட்டு, அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேவரின் தங்க கவசத்தை விழாக்குழுவினரிடம் இன்று ஒப்படைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறு.
ஆண்டுதோறும் இந்த விழாவின்போது அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு 13½ கிலோ எடையிலான தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்து வருகிறது.

தேவர் ஜெயந்தி – விழாக்குழுவிடம் தங்க கவசத்தை ஒப்படைத்த துணை முதல்வர்

விழா நிறைவு பெற்ற பின்பு, தங்க கவசம் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு மதுரையில் உள்ள ‘பேங்க் ஆப் இந்தியா’வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.

இந்த தங்க கவசத்தை எடுக்கும் பொறுப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேவர் நினைவிட அறங்காவலர் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில்,

தேவர் ஜெயந்தி – விழாக்குழுவிடம் தங்க கவசத்தை ஒப்படைத்த துணை முதல்வர்

வரும் 28-ந் தேதி தேவர் ஜெயந்தி விழா தொடங்குவதையொட்டி, தங்க கவசத்தை பெறுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு இன்று வந்தார்.

ஆவணங்களில் கையெழுத்திட்ட பின்பு வங்கி அதிகாரிகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து தங்க கவசத்தை எடுத்து அவரிடம் வழங்கினர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தேவரின் தங்க கவசத்துக்கு மாலை அணிவித்து, விழா குழுவினரிடம் ஒப்படைத்தார்.

அப்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு கொண்டுசெல்லப்பட்டது.