வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை – ஒருவர் கைது

 

வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை – ஒருவர் கைது

மதுரை

மதுரை அருகே வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்துவந்த நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 65 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் உள்ள சௌராஷ்ட்ரா காலனியில் குட்கா பொருட்களை பதுக்கிவைத்து, சுற்றுவட்டார

வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை – ஒருவர் கைது

பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி தலைமையில் பெருங்குடி போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அன்சாரி என்பவரது வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டருந்த 65 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக அன்சாரியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.