“சுங்கச்சாவடிகளில் கட்டணவிலக்கு வேண்டும்” – எம்.பி. சு. வெங்கடேசன்

 

“சுங்கச்சாவடிகளில்  கட்டணவிலக்கு வேண்டும்” – எம்.பி. சு. வெங்கடேசன்

சுங்கச்சாவடிகளில் கட்டணவிலக்கு வழங்கப்பட வேண்டும் என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

“சுங்கச்சாவடிகளில்  கட்டணவிலக்கு வேண்டும்” – எம்.பி. சு. வெங்கடேசன்

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அஞ்சல்துறை வாகனங்களுக்கு கட்டண விலக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுங்க கட்டண திருத்தத்தின் படி, பாஸ்டேக் நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை திருத்தத்தினால் மீண்டும் அஞ்சல்துறை வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

“சுங்கச்சாவடிகளில்  கட்டணவிலக்கு வேண்டும்” – எம்.பி. சு. வெங்கடேசன்

இந்நிலையில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், “தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அஞ்சல்துறை வாகனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த கட்டண விலக்கு தற்போது கட்டண விதிகள் திருத்தத்தின் போது வழங்கப்படவில்லை.எனவே மீண்டும் சுங்கச்சாவடிகளில் செலுத்த வேண்டிய கட்டணங்களிலிருந்து அளிக்கப்பட்ட கட்டணவிலக்கு வழங்கப்பட வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.