மருது சகோதரர்கள் சிலைக்கு தேமுதிக சார்பில் மரியாதை
Oct 27, 2020, 14:43 IST1603790001000
மதுரை
சுதந்திர போராட்ட வீரர் மருது சகோதரர்களின் 219-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவர்களது உருவ சிலைக்கு, தேமுதிக சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவியரசு தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்