மேம்பாலம் இடிந்து விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு!

 

மேம்பாலம் இடிந்து விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு!

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர் ஆகாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுரை – செட்டிக்குளம் இடையே 7.3 கி.மீ. தொலைவுக்கு ரூ.694 கோடியில் பிரமாண்ட பறக்கும் மேம்பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் இந்த பயங்கர விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேம்பாலம் இடிந்து விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக, பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது தல்லாகுளம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திட்ட பொறுப்பாளர் பிரதீப் ஜெயின், பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின் ஒப்பந்ததாரர் பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேம்பாலம் இடிந்து விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு!

முன்னதாக பாலம் இடிந்து விழுந்த இடத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்ததுடன், தற்காலிகமாக பாலம் கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளனர்.